Header Ads

மாலைதீவில் தகாத உறவு விவகாரம் - சிறுமிக்கு 100 கசையடிகள்


மாலைதீவில் சம்பவம்

மாலைதீவில் தன்னை விட வயதில் கூடிய ஒருவருடன் பாலியல் உறவினை வைத்துக் கொண்ட 16 வயதுடைய சிறுமிக்கு 100 கசையடிகளுடன் 08 மாதகால வீட்டுக் காவலையும் அந்நாட்டு நீதிமன்றம் தண்டனையாக விதித்துள்ளது. குறித்த சிறுமி 29 வயதுடைய நபரொருவருடன் தனது குடும்பத்தாரின் கண்டிப்பையும் மீறி உறவு வைத்துக் கொண்டமையை ஒப்புக் கொண்டதையடுத்தே இத்தண்டனை வழங்கப்பட்டுள்ளது. 

அத்துடன் குறைந்த வயதுடையவரிடம் (சிறுமி) உறவு வைத்துக் கொண்ட குற்றத்திற்காக குறித்த நபருக்கு 10 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. 

எனினும் குறித்த சிறுமிக்கு வழங்கப்பட்டுள்ள தண்டனையானது அவர் 18 வயதினை பூர்த்தி செத பின்னரே அமுல்படுத்தப்பட வேண்டுமென நீதிமன்றம் கட்டளையிட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செதி வெளியிட்டுள்ளன. 

மாலைதீவில் திருமணத்துக்கு மேலதிகமான பாலியல் உறவுகளுக்காக பெண்களுக்கு விதிக்கப்படும் வெளிப்படையான கசையடி தண்டனைக்கு ஐ.நா. மனித உரிமை பேரவையின் தலைவி நவனீதம் பிள்ளை அழுத்தம் கொடுத்து அறிக்கை வெளியிட்டு 10 மாதங்களின் பின்னர் குறித்த தீர்ப்பு வெளியிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.